Friday, April 20, 2012

திருமண உறுதியழைப்பிதழ்

நாங்கள் சீஏ பைனல் பரிட்சை எழுதிவிட்டு உட்கார்ந்திருக்கும் போதே எங்கள் நண்பன் இராஜேந்திர குமாருக்கு திருமண நிச்சயமாகிவிட்டது என்றும் நிச்சயதார்த்தம் திருமிழீசையில் என்றும் பத்திரிகையை வீட்டிற்கு அனுப்புவதாகவும் கூறியிருந்தான். இவனுக்கு சொந்த ஊர் குடியாத்தம். நாங்கள் வைத்த பெயர் “குடி. குடியாத்தத்தின் முதல் இரண்டு எழுத்து. செங்குந்தர் முதலியார். நல்ல பணக்காரக் குடும்பம். லயோலா கல்லூரியின் ஹாஸ்டலில் தங்கி சீஏ படித்துக் கொண்டிருந்தான். இவன் தயவால் அவ்வப்போது லயோலா ஹாஸ்டலின் அருமையான ஸ்பெஷல் சாப்பாடு. எம் காம் முதல் வகுப்பில் பாஸ் செய்துவிட்டு சீஏ சேர்ந்தவன். இவன் தம்பி உதயகுமார் பிஸ்ஸி பாட்டனி படித்து சீஏ சேர்ந்து முதல் தடவையிலேயே இண்டர் மற்றும் பைனல் பாஸ் செய்தவன். அவன் பிராக்டிஸ் திநகரில் ஆரம்பித்த போது உடையாரின் நெருங்கிய நண்பர் எத்திராஜ் முதலியார் அவர்கள் வந்திருந்தார்.

“திருமண உறுதியழைப்பிதழ்என்ற மஞ்சள் பத்திரிகையும் வந்தது. நான் நண்பன் ஜெவியிடம் நிச்சயதார்த்தம் என்றுதானே சொல்லியிருந்தான். அது என்ன திருமண உறுதியழைப்பிதழ் என்றதற்கு ஒருவேளை பத்திரிக்கை மாற்றி கொள்வார்களோ என்னவோ. நாளைக்கு காலைலே 6.30 மணிக்கு வரேன். ரெடியாயிரு. போய்ட்டு வந்துவிடலாம்.நானும் குளித்து அவனுடன், அப்போதுதான் அவன் வாங்கியிருந்த இண்ட்ஸுசுகி 100 சிசி மோட்டர் சைக்கிளில் திருமிழீசை நோக்கிப் பயணித்தோம். ஜெ வி சொன்ன மாதிரியே பத்திரிக்கை மாற்றிக் கொண்டனர். பெண்ணைக் கண்ணில் கூட காட்டவில்லை. நல்ல  சுவையான சாப்பாடு. தூங்கி எழுந்து சென்னை பயணம். வண்டி ஓட்டறியா? நான் பின்னாடி உக்காந்துண்டு பார்த்துக்கிறேன். லைசன்ஸ் இல்லை. ஆனாலும் சரி என்று சொல்லிவிட்டு ஒட்ட ஆரம்பித்தேன். அவ்வளவு சிரமமாக இல்லையென்றாலும் கியர் மாற்றும் போது சில சமயம் வண்டி நின்று விட்டது. நேஷனல் ஹைவே வருவதற்குள நன்றாகவே வண்டி ஓட்டக் கற்றுக் கொண்டுவிட்டேன். பிறகு இதே வண்டியை, பிராக்டிஸ் ஆரம்பித்த போது வாங்கினேன்.

என்னுடைய நிச்சயதார்த்தம் ஜூன் 12 ஆம் தேதி. பெண்ணையும் அழைத்து வந்திருந்தனர். நாங்கள் அப்போதிருந்த அண்ணாநகர் வீட்டில் நடந்தது. எங்களுடைய நெருங்கிய சொந்தங்கள் அத்தைகள், சித்திகள், சித்தப்பாக்கள், மாமாக்கள் மற்றும் நெருங்கிய நணபர்கள் வந்திருந்தனர். அவர்கள் வீட்டிலிருந்து ஒரு 25 பேர். தாத்தா, பாட்டி, பெரிய தாத்தா பாட்டி, மாமாக்கள் சித்தப்பாக்கள் அத்தைகள் என்று. திடீடிரென்று எங்கள் இருவரையும் அருகருகில் உட்காரச் சொன்னார் சாஸ்திரிகள். திருமணத்திற்கு முன் அப்படி சேர்ந்து உட்காரக்கூடாது என்பதனால் மனைவியின் தாத்தா நடுவில் உட்கார்ந்தார். மனைவியின் சொந்த தம்பி வரமுடியவில்லை.   அவள் சித்தப்பா மகன் எனக்கு தங்க சங்கிலி அணிவித்தான். 

அவர்கள் வீட்டில் பெரியவர்கள் ரொம்ப ஆச்சாரம் பார்ப்பவர்கள் யாரும் ஒட்டலிருந்து வரவழைத்தால் சாப்பிட மாட்டார்கள் என்பதனால் வீட்டிலேயே அனைவருக்கும் டிபன் ஏற்பாடாயிற்று. இட்லி, வடை, பொங்கல் ற்றும் கேசரி என்று. எங்கள் வீட்டில் நாங்கள் யாரும் சாப்பிட உட்காரவில்லை. அவர்கள் சாப்பிட்டு விட்டுப் போன பிறகு பார்த்துக் கொள்ளாலாம். இல்லையென்றால் சூப்பர் ஸ்டார் ஒட்டலிலுருந்து வரவழைத்துக் கொண்டு சாப்பிடலாம் என்று முடிவு செய்திருந்தோம்.

அவர்கள் எல்லாம் சாப்பிட்டு விட்டு கிளம்புவதற்கு முன்பே தங்கவேலுவை (பெரியண்ணாவின் வண்டி ஓட்டுனர்) அனுப்பி இட்லி வடை நிறைய சட்னி சாம்பார் எல்லாம் வாங்கிவரச் சொல்லி அனுப்பிருந்தோம்,. அர்கள் கிளம்பிய பிறகு, தங்கவேலு வாங்கி வந்த டிபனை நாங்கள் சாப்பிட்டோம்.


விசுவாமித்திரன் இராம இலக்குவனனுடன் ஜனகனின் வேள்விச்சாலையை அடைந்தான். அங்கு அப்போதுதான் வேள்வி முடித்து வீற்றிருந்த ஜனகன், முனிவனை நோக்கி யாரிவர்கள்.
இருந்த குலக் குமரர்தமை. இரு கண்ணின் முகந்து அழகு பருக நோக்கி.
அருந் தவனை அடி வணங்கி. யாரை இவர்? உரைத்திடுமின். அடிகள்! என்ன.
விருந்தினர்கள்; நின்னுடைய வேள்வி    காணிய வந்தார்; வில்லும் காண்பார்;பெருந் தகைமைத் தயரதன் தன் புதல்வர் என. அவர் தகைமை பேசலுற்றான்;

பொதுவாக கல்யாங்களில் திருமமாகாத பெண்ணையோ மகனையோ உடையவர்கள் வந்திருக்கின்றவர்களை கண்ணாலேயே பார்த்து இவன்(ள்) பொருத்தமாக இருக்குமா என்று பார்ப்பது வழக்கம். பதினைந்து வருடங்களுக்கு முன்  எஙகள் சமூகத்தில் அமெரிக்கா மோகம் தலைவிரித்து ஆடியது. மீதி வெளி நாடுகள் எல்லாம் துச்சம். நான் எப்போதுமே நல்ல வேளை.. இவர்கள் பார்வை மேற்கு நோக்கியே இருக்கட்டும் என்றே நினைத்துக் கொள்வேன். உறவினர் கல்யாம் ஒன்றில் என் மாமனார்அதோ பார் அமெரிக்கா போறதுஎன அமெரிக்காவிலிருந்த வந்திருந்த ஒரு கலயாமாகாத பையனைப் பற்றி கிண்டலாகக் கூறிக் கொண்டிருந்தார்.

ஜனகனும் அரசகுமாரர்கள் இருவரையும் “இரு கண்ணின் முகந்து அழகு பருநோக்கி பார்க்கின்றான் இதில் நோக்கி என்ற வார்த்தை மிகவும் முக்கியமானது. இரானின் அழகு அப்படி பார்ப்பவரை வசீகரப் படுத்துவது என்று வைத்துக் கொண்டால் பார்த்து என்ற சொல்லை உபயோகித்திருக்கலாம். ஜனகனும் பெண்ணை பெற்றவன்தான். ஆனால் சீதையை திருமம் செய்ய வேண்டுமானால் வில் உடைக்கப் பட வேண்டும். குமரன பார்ப்பதற்கு மனம் கவருபவனாகவிருந்தாலும் வில் உடைக்கும் வலிமை அவன் தோள்களுக்கு உண்டா என அறியவே கவி அவன் தோள்களை கண்டதை குறிப்பதற்கே நோக்கி என்ற வார்த்தையைப் பயன் படுத்துகின்றான். விசுவாமித்திரனும் :விருந்தினர் வேள்வி கா வந்தனர். உன் வில்லையும் காண்பார்என்று ஜனகனின் வயிற்றில் பால் வார்ப்பது போல் சொல்லிவிட்டு உடனேயே “ தசரதன் புதல்வர் இவர்: என்கின்றான். இது கேட்ட ஜனகன் மனதில் இவனும் அப்பாவைப் போல் அறுபதினாயிரம் மனைவியருடன் இருப்பானோ,. போயும் போயும் இப்படிப் பட்ட இடத்திலா சம்பந்தம் செய்ய வேண்டும் என்ற சிந்தனைக் கட்டாயம் ஓடியிருக்க வேண்டும். பெண்ணைப் பெற்றவர்கள் அப்படி நினைப்பதில் எந்த தவறுமில்லை. இதை நன்றா உர்ந்த விசுவாமித்திரன் இரகு குப் பெருமையெல்லாம் கூறி

திறையோடும் அரசு இறஞ்சும் செறி கழற் கால் தசரதன் ஆம்.
பொறையோடும் தொடர் மனத்தான் புதல்வர் எனும் பெயரேகாண்-
உறை ஓடும் நெடு வேலாய்! உபநயன விதி முடித்து.
மறை ஓதுவித்து. இவரை வளர்த்தவன் வசிச்சன் காண். என்கின்றான்.

இவர்கள் தசரதனின் மனைவிகளுக்கு வேள்வியில் வந்த பாயாசத்தினால் பிறந்தவர்கள், இறைவன் அருளால். அதனால் தசரதன் புத்தியிருக்கும் என எண்ண வேண்டாம்.. அது மட்டுமின்றி இவனை வளர்த்தவன் வசிட்டன். ஆகவே கவலைப் படாதே என்று ஜனகனின் வயிற்றில் மீண்டும் ஒரு முறை பாலை வார்க்கின்றான் விசுவாமித்திரன். பிறகு இராமன் வில்லாற்றலையும் வேள்விகாத்த விதத்தையும்  தாடகையையழித்தைப் பற்றி மிக அழகாக அதே சயம் இரத்தின சுருக்கமாகக் கூறுவதிலிலுள் நயம் வியக்கத்தக்கது.

அலை உருவக் கடல் உருவத்து  ஆண்தகைதன் நீண்டு உயர்ந்த
நிலை உருவப் புய வலியை  நீ உருவ நோக்கு ஐயா!
உலை உருவக் கனல் உமிழ் கண்  தாடகைதன் உரம் உருவி.
மலை உருவி. மரம் உருவி. மண் உருவிற்று. ஒரு வாளி!

அதேபோல் மிக திறமையாக இவன் அரக்கர்களை கொன்று என் வேள்வி காத்தான். இவனுக்கு நான் தவத்தினால் பெற்ற அரிய படைக்கலங்களை உவந்து  கொடுத்தேன். அவை இப்போது இவனுக்கு மிக்க அன்புடன் ஏவல் புரிகின்ற. இவனுடைய கால் பாதம் பட்ட மாத்திரத்ரத்திலேயே அகலிகை சாபவிமோசனமடைந்ந்தாள். அப்பேற்பட்ட கீர்த்தி மிக்க வீரன் இவ்வள்ளல் எ ஸ்ரீராமனின் பெருமையைக் கூறினான் முனி.

இவ்வாறு சிறப்பான இராமனின் வரலாற்றைக் கேட்ட ஜனகன் இவன் வில்லை வளைத்தால் என்னை துயர் கடலிலிருந்து காப்பாற்றுவான் என் மகளும் தவப்பேற்றைப் பெற்றவளாவாள்.


மாற்றம் யாது உரைப்பது? மாய விற்கு நான்
தோற்றனென் என மனம் துளங்குகின்றதால்;நோற்றனள் நங்கையும்;    நொய்தின் ஐயன் வில்
ஏற்றுமேல். இடர்க் கடல்  ஏற்றும்என்றனன்.

உடனேயே ஏவலர்களை அழைக்க அவர்களும் ஒடினர்யுத சாலைக்கு.
என்றனன். ஏன்று. தன்    எதிர் நின்றாரை. அக்
குன்று உறழ் வரி சிலை    கொணர்மின். ஈண்டுஎன.
நன்றுஎன வணங்கினர்.    நால்வர் ஓடினர்;பொன் திணி கார்முகச்    சாலை புக்கனர்.
அந்த மாபெரும் வில்லை அறுபதினாயிரம் பேர் இழுத்து வந்தனர்.. அந்த வில்லைக் கண்ட நகர மாந்தர்கள் இம்மன்னவனுக்கு புத்திக் கெட்டுப் போய்விட்டது. இல்லையேல் இப்படியா ஒரு நிபந்தனை விதைப்பான் மகளின் திருமத்திற்கு என்றும் பல்வாறாகவும் கூறுகின்றனர்.
என். இது கொணர்கஎன.    இயம்பினான்?’ என்பார்;
மன்னவர் உளர்கொலோ    மதி கெட்டார்?’ என்பார்;
முன்னை ஊழ் வினையினால்    முடிக்கில் ஆம்என்பார்;கன்னியும் இச் சிலை  காணுமோ?’ என்பார்.
சதானந்த முனிவன் வில்லின் பெருமையையும் சீதை பிறந்து வளர்ந்ததைப் பற்றியும் அவளுடைய அழகையும் குணத்தையும் கூறி, பார்த்த மன்னர்கள் எல்லோருமே காதல் கொண்டவர்களாய் வில்லை எடுத்து நாணேன்ற முடியாத காரணத்தால் ஒன்று சேர்ந்து யுத்தம் செய்ததையும் கூறினான்,

அன்று முதல். இன்று அளவும்.    ஆரும் இந்தச் சிலை அருகு
சென்றும் இலர்; போய் ஒளித்த    தேர் வேந்தர் திரிந்தும் இலர்;
என்றும்இனி மணமும்இலை    என்று இருந்தேம்; இவன் ஏற்றின்.
நன்று; மலர்க் குழல் சீதை    நலம் பழுது ஆகாதுஎன்றான்.இன்றுவரை யாரும் வில்லை நாணேற்றவில்லை. இவ்விராமன் ஏற்றுவானேயாயின் க்க நல்லது. மலர் சூடிய கூந்தலையுடைய சீதையின் கன்னிமை அழகும் வீணாகாது என்றான்.

நினைந்த முனி பகர்ந்த எலாம்    நெறி உன்னி. அறிவனும் தன்
புனைந்த சடை முடி துளக்கி.    போர் ஏற்றின் முகம் பார்த்தான்
வனைந்தனைய திருமேனி    வள்ளலும். அம் மா தவத்தோன்
நினைந்த எலாம் நினைந்து. அந்த    நெடுஞ் சிலையை நோக்கினான்.
நினைந்து முனி பகர்ந்த எலாம் நெறியுன்னி’ என்றது தெய்வ இயல்பு வாய்ந்தவள் ஜனகன் மகள் என்பதனையும் அவளை அடைவதன் அருமைகளையும்இவன் ஏற்றின் நன்றுஎன்று சதானந்தர்  கூறியதையும்  உட்கொண்டு.  வனைந்தனைய வனைந்தது அனைய.   அல்லது   வனைந்தால் அனைய   எனலாம்.  வில்லை நோக்கியது  - இந்த வில்லை எந்த இடத்தில் பற்றி   எடுக்கலாம் என்ற பார்வையில்.

இவ்வில்லோ மிக வலியது. இருவருமே ஒருவருக்கு ஒருவர் என்றே படைக்ப்ட்டது போலிருக்கின்றனர். இவன் வில்லை வளைக்காவிட்டால் இருவருக்குமே வாழ்வில்லையே என்று வருந்திய மாந்தர்
வள்ளல் மணத்தை மகிழ்ந்தனன் என்றால்
கொள்என முன்பு கொடுப்பதை அல்லால.
வெள்ளம் அணைத்தவன் வில்லை எடுத்து. இப்
பிள்ளை முன் இட்டது பேதைமைஎன்பார்.
இந்த அரசனின் மதிகெட்டுப் போய்விட்டது. இவனைப் பிடித்திருகிறது என்றால் மகளை திருமம் செய்து கொடுக்கவேண்டும். அதை விடுத்து இந்த வில்லை இவன் முன் எடுத்து வைத்திருக்கின்றான். என்ன பேதமை இது    என பலவாறு புலம்பினர்.

இராமன் பொன் நாகமும். நாகமும். நாண நடந்தான். இராமன்     நடக்கும்போது  அவனது    பெருந்தோற்றம்   கண்டு மேருமலையும்.   இவனைப்  போல  மிடுக்கோடு  நடக்க    முடியாமை பற்றியும் யானையும்  நாணின  என்பது.    நாகம்-  மலை. யானை என இருபொருளில் வரும்.


ஆடக மால் வரை அன்னதுதன்னை.
தேட அரு மா மணி. சீதை எனும் பொன்
சூடக வால் வளை. சூட்டிட நீட்டும்
ஏடு அவிழ் மாலை இதுஎன்ன. எடுத்தான்.
சீதைக்கு தான இடப் போகும் மாலை என்பது போல் எவ்வித சிரமமுமில்லாமல் வில்லை கையில் எடுத்தான்.

என்னுடைய நிச்சதார்த்தத்தின் போது திடிரென்று சாஸ்திரிகல் இருவரும் மனையில் உட்காரவேண்டும் என்று சொல்லப் போக, மாலை ஏதும் இல்லாத காரணத்தால் டிரைவர் தங்கவேலுவை அனுப்பி அமைந்தகரையிலிருந்து மாலை வாங்கிவர சொன்னோம். அவனும் ஏதோ மாலை வாங்கி வந்தான். ஒருவருடம் கழித்து என் மனைவி ஏதோ கோபத்தில் “உங்க வீட்டு லக்ஷ்ணம் தான் தெரியுமே. நிச்சயதார்தத்துக்கு அரளி பூ மலை போட்டவதான் நீங்க. எங்க வீட்டிலே சொல்லியிருந்தா அழகா ஜம்முனு ரோஜா மாலை இல்லை மல்லிகை மாலை போட்டிருப்போம். எனக்கு ஆரம்பமே சரில்லை “அரளி மாலைக்கு அப்படி என்ன கேடு? அது செத்தவாளுக்கு போடுற மாலை  நான் எப்படியும் பலி ஆடுகள்தானேன்னு சிம்பாலிக்கா சொல்வதற்காக வாங்கி வந்ததானோ என்னவோ? இதில எல்லாம் என்ன இருக்கு.  ஏன் யாரவது கரெக்டா மல்லி இல்லை ரோஜாப்பூ மாலை வேணும்ணு  சொல்லியிருந்தா கரெக்டாக வாங்கிண்டு வந்திருப்போமே?. ஏன்  யாருமே சொல்லலை?. இதோ விளையாட்டு போல 22 வருடம் ஆகி விட்டது எந்த பிரச்சினையுமில்லாமல்.

தடுத்து இமையாமல் இருந்தவர். தாளில்
மடுத்ததும். நாண் நுதி வைத்ததும். நோக்கார்;கடுப்பினில் யாரும் அறிந்திலர்; கையால்
எடுத்தது கண்டனர்; இற்றது கேட்டார்.

கண்     இமை   கொட்டினால்    இராமன்     வில்லையெடுத்து
நாணேற்றுவதைக்  காணாமற்போய் விடுவோம்  என்று கண் கொட்டாது
பார்த்தவர்களும் அந்த இராமன் வில்லை எடுத்ததையும்.  அது  முறிந்த
ஓசையையும்  கேட்டனரே  அல்லாமல் அதை   நாணேற்றியதைக் காண
முடியாதவராயினர் என்பது. இற்றது - இறுதலால் தோன்றிய ஒலி 
இற்றதனால் தோன்றிய ஓசை விண்.   மண். பாதலம் என்னும் மூவுலகத்தார்க்கும் அச்சம் விளைத்தது என்பது.

தயரதன் புதல்வன்என்பார்;    ‘தாமரைக் கண்ணன்என்பார்;
புயல் இவன் மேனிஎன்பார்;     ‘பூவையே பொருவும்என்பார்;
மயல் உடைத்து உலகம்என்பார்;    ‘மானிடன் அல்லன்என்பார்;
கயல் பொரு கடலுள் வைகும்    கடவுளே காணும்என்பார். இவன் சாதாரண மனிதனில்லை. அறுபதானாயிரம் பேர் தூக்கிவந்த வில்லை நாணேற்றி இறுப்பதற்கு இவன் கடவுளேயாகும் என்கின்றனர் மக்கள்.

நம்பியைக் காண நங்கைக்கு    ஆயிரம் நயனம் வேண்டும்;கொம்பினைக் காணும்தோறும்.    குரிசிற்கும் அன்னதே ஆம்;தம்பியைக் காண்மின்!என்பார்;    ‘தவம் உடைத்து உலகம்என்பார்;
இம்பர். இந் நகரில் தந்த    முனிவனை இறைஞ்சும்என்பார்.
வில்லினைப் பார்த்த மக்கள் விசுவமித்திர் முனுவனுக்கு அறிவில்லை ; இந்த சிறுவனை போய் வெட்கமில்லாமல் வில்லிற்கு நாணேற்றுக் கூறுகின்றானே எனக் கூறிய மக்களே இப்போது அம்முனிவனை வணங்கவேண்டும் இவனால்தானே சீதைக்கு திருமணம் கழிந்தது எக் கூறுவது மக்களின் இயல்பு எப்படி என்று  எடுத்துக் காட்டுவது.



வில்லீற்ற(ஓசை பாதளா லோகம் வரைக் கேட்டாலும் ஒருத்தி மட்டும் இன்னும் தன் கவலையிலே இருந்தாள். சீதைக்குக் கேட்கவில்லை. அப்போது மண்டபத்தில் இருந்து ஒடி வந்த தோழி ஒருத்தி சிதையை கண்டதும்  வந்து அடி வணங்கிலள்; வழங்கும் ஓதையள்;அந்தம் இல் உவகையள். ஆடிப் பாடினள்;
சிந்தையுள் மகிழ்ச்சியும். புகுந்த செய்தியும்.
சுந்தரி! சொல்என. தொழுது சொல்லுவாள்;

அவள்
இராமன்என்பது பெயர்;    இளைய கோவொடும்.
பராவ அரு முனியொடும்    பதி வந்து எய்தினான்;
வில்  அதனை. ஆண்தகை.நாண் இனிது ஏற்றினான்;
   
நடுங்கிற்று உம்பரே!

தோழி வருகிறாள். மகிழ்ச்சியான செய்தியின்பால்t?) உள்ளம் மகிழ்ந்தவள் சீதையைக் கண்டதும் வங்கவுமில்லை. வாழ்த்துக்களை கூறவுமில்லை. _ சீதையே உன் மனமகிழ்ச்சிக்குக் காரமா செய்தியைச் சொல் என்றபோது அவள் சொல்லும் விதம் சொன்ன சொற்கள் சொல்லிய முறை எல்லாமே மனவியலில் மிக்க தேர்ந்தவர்களால் மட்டுமே முடியக் கூடியவை யாகும். கம்பனின் சிறப்பு சர்வசாதரரணமானவர்களின் வாயிலாக வெளிப்படுமிடங்களில் இதுவும் ஒன்று. சீதை ஏற்கெனவே காதல் வயப்பட்டு காம வேதனையில் வீழ்ந்து வில் முறித்த ஓசைக் கூட கேட்காமல் இருக்கின்றாள். காதலில் வீழத்தியவன் யார் என்பது கூட அவளுக்குத் தெரியாது. வில்லை முறித்த ஆணை அவள் திரும்ணம் செய்ய வேண்டும். தோழியின் வாக்காக கம்பன் முதலில் இராமன் எனபவன் அவன் பெயர். நேற்றுதான் முனிவனோடும், தம்பியோடும் நம் நகர் வந்தான். வில்லை நாணேற்றியதுமில்லாமல் முறித்தே விட்டான் என்று ஒன்றன் பின் ஒன்றாக அழகாக சீதையின் சந்தேகத்தை போக்கும் வழியில் கூறுவது மிகவும் இரசிக்கத் தக்க ஒன்று. கம்பராமாயணத்தில் பலவிடங்களில் உலவியல் ரீதியாகத்தான் விடை கான முடியும் என்று கல்வியிற் பெரியவர் திரு. குருநாதன் கூறியது போன்றவிடங்களில் இதுவும் ஒன்று.
கோமுனியுடன் வரு கொண்டல்என்ற பின்.
தாமரைக் கண்ணினான்என்ற தன்மையால்.
ஆம்; அவனேகொல்என்று. ஐயம் நீங்கினாள்;வாம மேகலையினுள் வளர்ந்தது. அல்குலே!

இல்லையே நுசுப்புஎன்பார்.    ‘உண்டு. உண்டுஎன்னவும்.
மெல்லியல். முலைகளும்.    விம்ம விம்முவாள்;
சொல்லிய குறியின். அத்    தோன்றலே அவன்;அல்லனேல். இறப்பென்என்று.    அகத்துள் உன்னினாள்.

இவள் சொல்வதைப் பார்த்தால் தன் மனதை பறிகொடுத்த வீனைப் போல்தான் இருக்கின்றது அப்படி ஒரு வே இல்லையெனில் நான் உயிரை விட்டுவிடுவேன் என மனதில் தீர்மானித்தாள் சீதை. இராமன் அவ்வாறு நினைத்த மாதிரி கவி சொல்லவில்லை. சதானந்தன் கூறிய வில்லின் பெருமையையும் ஜனகனின் மகள் சீதையின் அழகையும் அவளை அந்த வில்லை நாணேற்றினால் ) மம் முடிக்கலாம் என்பதைமயும் எண்ணித்தான் அவன் வில்லிடம் சென்றான்.

சீதைக்கும் தெரியும் இராமன் அரசகுமாரன்ம் என்பது. அதே போல் இராமனும் அறிவான் சீதை ஒர் அரசிளங்குமரியாகத்தான் இருக்க வேண்டுமென்று. சீதைக்கு ஒரு தெளிவு பிறக்கின்றது தோழி கூறிய முறையினால். இராமனுக்கு தான் மம் புரியப் போவது தான் காதலித்த அதே பெண்தான் என்பது இன்னமும் தெரியாது. ஜனகன் முனிவனை வினவி, தசரதனுக்கு ஒலையனுப்பினான்.

எனக்கு சிறுவயதிலிருந்தே மைனர் செயின் போட்டுக் கொள்ளவேண்டும் என்பது ஆசை. நாங்கள் டெல்லியிலிருந்து சென்னை வந்ததிலிருந்தே என பெரிய மன்னியின் செயினை போட்டுக் கொண்டிருந்தேன். நிச்சயதார்த்ததின் போது எனக்கு அணிவித்த செயின் என் மனைவி ரொம்பகாலாமக கழுத்தில் போட்டுக் கொண்டிருந்த செயின் என்பதும், நான் ஏற்கெனெவே செயின் போட்டுக் கொண்டிருப்பதால், அது தனக்கே மீண்டும் வந்துவிடும் என்று அவள் தானகவே ஒரு கணக்கு போட்டுவைத்திருந்தாள். அதற்கேற்றார் போல் நான் திருமம் வரைக்கும் இரண்டு செயினைமே போட்டுக் கொண்டிருந்தேன். திருமத்திற்கு முதல் நாள் கரெக்டாக மன்னியிடம் திருப்பிக் கொடுத்துவிட்டேன். ஒன்றுக்கு பத்ததாகப் பிறகாலத்தில் செலவழித்திருந்தால் கூட வருத்தமடைய மாட்டேன்.  ஆனால் நூறாக செலவழிக்கும் போது, ஏன் நானே சம்பாதித்து செயின் வாங்கிப் போட்டுக கொள்ளவில்லை என்ற வருத்தம் ஒவ்வொரு முறையும் எழுகின்றது.


No comments:

Post a Comment