நாங்கள்
சிறுவர்களாக இருந்த போது வானிலை மாற்றம் போல் விளையாட்டுகளும் சீசனுக்கு சீசன்
மாறுபடும். அது யார் அறிவிப்பது என்றே தெரியாமல் பம்பரம், கோலி, காத்தாடி, கில்லி,
சிகரெட் அட்டை என்று அவுட்டோர் கேம்களாகவும் தாயக்கட்டை, சீட்டாட்டம், பாம்பே
டிரேட், கேரம் என்று இண்டோர் கேம்களாகவும் மாறும். கிரிக்கெட் பால் பேட்மிண்டன்,
வாலிபால் போன்றவை 15 16 வயதிற்கு மேல் தான் கனவே காணமுடியும்.
கோலியில் இரண்டு விதமான
விளையாட்டு உண்டு. ஒன்று ”பேந்தா” மற்றொன்று ”குழி”. பேந்தாவில் ஒரு
செவ்வக வடிவில் நடுவில் ஒரு கோடு வரையப்பட்டிருக்கும்.
பத்தடி தொலைவில் ஒரடிக்கு ஒரு கோடு வரையப்படும். இதற்கு பெயர் “உத்தி” உத்தியிலிருந்து கோலியை பேந்தாவை நோக்கி போட வேண்டும்.
பேந்தாவிற்கு உள்ளே அல்லது வெகு அருகில் நின்ற கோலியுடையவன் ஆட வேண்டும். பேந்தாவிலிருந்து வெகு தொலைவில் இருந்த கோலி பேந்ந்தாவின்
நடுக்கோட்டில் வைக்கப்படும்.

ஆடுபவன் மூன்றாம் முறை உத்தியில் நின்று
அடிக்கும் போது எதிரியின் கோலியை மூன்று தடவை தொடர்ந்து அடிக்க வேண்டும். இதனால் எதிரியின் கோலி
பேந்தாவிற்கு தொலைவில் போய்விடும். ஒருவன் தன் கோலியால் அடிக்கும் போது போகிறவர்கள் யாரவது தடுத்துவிட்டால் ”தூர்” என்று சொல்ல வேண்டும்.,போகிறவர்கள் அதை காலால் தள்ளும்படி கேட்டுக்
கொள்ளப்படுவர். மூன்றாம் முறை உத்தியில் நின்று அடிப்பவன் எதிரியின் கோலியை
மூன்று தடவை அடித்து விட்டால் எதிரி தன்
கோலியை முட்டிகையால் தள்ளி கோலியை பேந்தாவிற்குள் வைக்க வேண்டும். அப்படி வைத்து விட்டால் அடித்தவன் ஜெயித்தவன்.
இது தவிர இதில் பல்வேறு சப்ரூல்ஸ் எல்லம் உண்டு. பேந்தாவிற்கு அருகில் உள்ள
போது தன் கோலியால் எதிரியின் கோலியை அடிக்க முற்படும் போது ”பேந்தாமேல் கைப்படும்” என்றோ இல்லை எதிரி ”பேந்தாமேல் கைப்படக்கூடாது” என்றோ முதலில் சொல்லிவிட்டாலோ அதன் படி நடக்க வேண்டும். அதே
போல் அடிக்கப்படும் கோலி பள்ளத்திலிருந்தால் அடிப்பவன் ”நேர்” என்று சொன்னவுடன் கோலியை பள்ள நேருக்கு சமநிலையில் வைக்கவேண்டும்.
நானும் என இரண்டாவது அண்ணனும் பேந்தா எக்ஸ்பர்ட். என்
தம்பிகள் மற்றும் நண்பர்கள் என்று வித்தியாமின்றி அனைவரின் கோலிகளையும் சர்வசாதரானமாக
உடைத்திருக்கின்றோம். நல்ல தொலைவில் உள்ள கோலியைக் கூட குறித் தவறாமல் அடித்துவிடிவேன்.
என் அண்ணன் கோலியை என்றில்லாமல் பம்பரத்தையும் உடைப்பதில் வல்லவன். ஒருகாலத்தில் நானும்
அவனும் கிட்டதட்ட ”டிமாலிஷன் ஸ்குவாட்” அளவுக்கு தெரு பசங்களின் கூட்டத்தில் இருந்தோம்.
ஆடுபவன் இரண்டு சிறு கோலிகளை அரங்கத்திற்குள் உருட்டி
எதை அடிக்க வேண்டும் என்று கேட்பான். ஆடுகிறவனுக்கு கிட்டத்தில் இருப்பது கீழ் என்றும்
தொலைவில் இருப்பது மேல் எனறும் அழைப்பது வழக்கம். அப்படி அடித்து விட்டால்
ஆடுபவன் ஜெயித்து விட்டான். இதிலேயும் நிறைய சப் ரூல்ஸ் உன்டு. அரஙக்திற்குள் எறியப்பட்ட இரு கோலிகளுக்கு இடையே
இரு விரற்கடை தூரத்திற்கு மேல் இருப்பின் எதிரி சொன்னதைத் தான் அடிக்க வேண்டும். இரு விரற்கடை அளவுதான் இருந்தால், ஆடுபவன் அவன் இஷ்டத்திற்கு அடிக்கலாம். அடித்த கோலியோ
இல்லை அடிக்கப்பட்ட கோலியோ
குழிக்குள் விழுந்து விட்டாள் டபுள் பாச்சா எனும் குற்றமாகும். இது அவுட்.. முதலில் எறிந்த இரு கோலிகள் அரங்கத்திற்கு உள்ளே வீழ்ந்தாலும் வெளியே வீழ்ந்தாலும், அடிக்கும் கோலி
நேராக குழிக்குள் வீழ்ந்து விட்டால் பேசியதைப்
போல் டபுளாக பணம் தரவேண்டும். அடிக்கும் கோலி, காயை அடிக்காமல் கோட்டின் மேல் நிற்பின்
அது லாக் எனும் குற்றமாகும். குற்றம் எல்லாமே தோல்வியாகும். இது
பெரும்பாலும் காசு வைத்து ஆடும் விளையாட்டு நாங்கள் இதையே சிகரெட் அட்டையை பணத்திற்கு பதில் பயன்படுத்தி
விளையாடுவோம்.
என் அண்ணன் கணேசன் அனைத்து
ஆட்டங்களிலும் சாம்பியன். எவ்வளவோ
கோலியயையும் உடைத்திருக்கின்றான். கேட்டால் “ஆட்டம்னு வந்துட்டா கனிக்ஹரம் (கருனை)
பாக்க முடியாது. ஒரே இலக்கு. ஜெயிப்பதுதான்”
மந்திரை போனவுடன் தலைவிரி கோலமான கைகேயி

கிளை கொள் மேகலை சிந்தினள்; கிண்கிணியோடும்
வளை துறந்தனள்; மதியினில் மறுத் துடைப்பாள்போல்,
அளக வாள் நுதல் அரும் பெறல் திலகமும் அழித்தாள்.
நவ்வி வீழ்ந்தென, நாடக மயில் துயின்றென்ன,
‘கவ்வை கூர்தரச் சனகி ஆம் கடி கமழ் கமலத்து
அவ்வை நீங்கும்’ என்று அயோத்தி வந்து அடைந்த அம் மடந்தை
தவ்வை ஆம் என, கிடந்தனள், கேகயன் தனையை.
கைகேயி மான் வீழ்ந்தது
போலவும் ஆடுகின்ற மயில் துயில்வது போலவும், அயோத்தியை விட்டு செந்தாமரை மலரில் வசிக்கும் திருமகள்
என்று நீங்குவாள் அவளிடத்தை கைபற்ற வந்த அவளின் தமக்கை மூதேவியைப் போல இருந்தாள்.
ஓடும் மானையும் ஆடும் மயிலையும் கூறியது இந்நாள் வரையில் அவளிடமிருந்த
இனிய தோற்றத்தைக் காட்டியது மட்டுமில்லாமல் அவளிடைய புற அழகில் மயங்கிய கவியின் கூற்றுமாகும்.
அவனுக்கு இவள் ஏன் இப்படி வீழ்ந்திருக்க்கின்றாள் என்ற கேள்வி எழுந்தவுடன் அவளுடைய
உள் நோக்கம் புலப்படுகின்றது. உடனே அவளை “
மூதேவி” என்று திட்ட ஆரம்பித்து விடுகின்றான். ‘கவ்வை கூர்தரச் சனகி ஆம் கடி கமழ் கமலத்து
அவ்வை நீங்கும்’ என்று அயோத்தி வந்து அடைந்த அம் மடந்தை
தவ்வை ஆம் என, கிடந்தனள், கேகயன் தனையை.
நள்ளிரவு தாண்டிய பிறகு தசரதன்
தானே கைகேயிடம் ராமனின் பட்டாபிஷேக செய்தியை சொல்ல வந்தான். கோசலைக்கு தாதியர்
போய் சொல்லிவிடுகின்றனர். அவளும் இன்னொரு ராயான சுமத்திரைக்கு சொல்லி அவளயும் அழைத்துக் கொண்டு கோவிலுக்குப்
போனாள். இது நடந்தது மாலை வேளையாயிருத்தல் வேண்டும். ஜோதிடர்கள் நாளையே பட்டாபிஷேகம் என்று
சொன்னவுடன் தசரதன் நகர மாந்தர்களுக்கு பறையறிவித்து தெரியப்படுத்தச் சொன்னான். நகரத்தை அலங்கரிப்பதைப் பார்த்த கூனி
போய் சொல்லித்தான் கைகேயிக்கு விஷயமே தெரிய வருகின்றது. ஏன் கோசலையும்
சுமத்திரையும் கைகேயிக்கு நற்செய்தியை சொல்லவில்லை. இதற்கு ஒரே காரணம் தான் இருக்க முடியும் அது கைகேயின் பால் அதீத பிரியம் தசரதன்
வைத்த காரணத்தால், அவள் மீது கொண்ட அசூயைதான் காரணமாக இருக்க வேண்டும்.
தசரதன் இராமன் பாலும் அதீத பாசம் வைத்தவன். அதனால்தான் இராமனைப் பெற்றவள்
கோசலையாகவிருந்தாலும் வளர்த்தவள் கைகேயி ஆகினள். நல்ல புத்தியிருக்கும் போது அவளே சொல்லுகின்றாள் “ராமனை பெற்ற எனக்கு என்ன குறை வந்துவிட
முடியும்?. கைகேயியை பார்ப்பதற்கு வரும் இராமனை பார்க்கும் மக்களின் கருத்தாகவும்
கவி “நமக்கே இவ்வளவு
சந்தோஷமாகவிருக்கின்றதே. இவனோ பெற்றவள் கையில் வள்ர்ந்தவன் இல்லை. இவனை வளர்த்தவள் கைகேயீ. அவள் மனம்
என்ன மகிழ்ச்சியுறும்” என்று அழகாகக்
கூறுவார்
உள்ளே நிழைந்த தசரதன் கீழே வீழ்ந்துகிடக்கும் கைகேயியை தன்
கரங்களால் தழுவி எடுக்க அவள் அவன் கைகளை விலக்கி மீண்டும் தரையில்
வீழ்ந்தவள் ஒன்றும் சொல்லாமல்
பெருமூச்சுவிடுபவளானாள். தசரதன் ”என்ன நடந்தது? யார் இதற்குக் காரணம்.
அவர்களை நான் தண்டிப்பேன். உடனே சொல்லிவிடு” எனக் கேட்க
வண்டு உளர் தாரவன் வாய்மை கேட்ட மங்கை,கொண்ட நெடுங் கணின் ஆலி கொங்கை கோப்ப
‘உண்டு கொலாம் அருள் என்கண்? உன்கண் ஒக்கின்,
பண்டைய இன்று பரிந்து அளித்தி’ என்றாள்.
நெடுங்கண்களில் வழியும் நீர் மார்பில் வீழ எனக்கு முன்பு
அளித்த இரண்டு வரத்தை இன்று பரிவுடன் அளிக்க வேண்டும் என்றாள். தன் கருத்தையறிந்தால்
அவன் அதற்கு உடன்பட மாட்டான் என்ற காரன்த்தினாள் முதலில் வரம் தர வேண்டும் என்று
நயமாக பேசுகின்றாள். வாய்மை என்ற சொல்லை ஏன் பயன் படுத்த வேண்டும்?
கள் அவிழ் கோதை கருத்து உணராத மன்னன்,
வெள்ள நெடுஞ் சுடர் மின்னின் மின்ன நக்கான்;
‘உள்ளம் உவந்துள செய்வென்; ஒன்றும் லோபேன்
வெள்ள நெடுஞ் சுடர் மின்னின் மின்ன நக்கான்;
‘உள்ளம் உவந்துள செய்வென்; ஒன்றும் லோபேன்
வள்ளல்
இராமன் உன் மைந்தன் ஆணை’ என்றான்
இவளின் கருத்து இதுதான் எனத் தெரியாமால் ”உன் மைந்தன் ( இராமனின் பேரில் அதிக
பாசம் உடையவள் என்று நம்பியதால் வந்தது) இராமன் மீது ஆணை உடனே தருவேன்” என்றான். அப்படியும் அவள் தன் கருத்து
தெரிந்தால் ஒரு வேளை இவன் மாறினாலும் மாறிவிடுவான்
என்பதை மனதில் கொன்டு ”தேவர்கள் சாட்சியாக நீ எனக்கு வரத்தை அளிக்க வேண்டும்” என்றாள்.சேய் அரசு ஆள்வது; சீதை கேள்வன் ஒன்றால்
போய் வனம் ஆள்வது’ எனப் புகன்று, நின்றாள் -
தீயவை யாவையினும் சிறந்த தீயாள்.

என்பவற்றில் நல்ல என்பது கொடிய என்னும் பொருளைத் தருவது போல,
இத்தகைய கொடிய சொற்களை அஞ்சாது சொல்லி நிற்றல் இவளையன்றிப்
பிறர்க்கு அரிது என்பதனால் ‘புகன்று நின்றாள்’ என்றார்.
அதை கேட்ட தசரதன்
மேவி நிலத்தில் இருக்கும்; நிற்கும்; வீழும்;ஓவியம் ஒப்ப உயிர்ப்பு அடங்கி ஓயும்;
பாவியை உற்று எதிர் பற்றி எற்ற எண்ணும்;-
ஆவி பதைப்ப, அலக்கண் எய்துகின்றான்.
அவளை கொன்றாள் பெண் என்பதால் பழி வருமே என்ற காரணத்தினால் நாணி
பெண் என உட்கும்; பெரும் பழிக்கு நாணும்;
உள் நிறை வெப்பொடு உயிர்த்து, உயிர்த்து, உலாவும்;
கண்ணினில் நோக்கும் அயர்க்கும் - வன் கைவேல் வெம்
புண் நுழைநிற்க உழைக்கும் ஆனை போல்வான்.
கைகேயியைக் கொன்றுவிடலாமா என்ற
கருதி தயரதன் அதனால்
உண்டாகும் பழிக்கு நாணிஅதனைச் செய்யாமல் விடுத்தான். நாணுதலாவது
தனக்குப் பொருந்தாத இழிந்த செயலில் மனம் ஒடுங்குதல். முதல் வரம்
கொடும்புண் செய்ய, இரண்டாவது வரம் அப்புண்ணில் வேலை எடுத்து
நழைத்தாற்போன்ற மிகுந்த துன்பம் விளைத்தது.
உண்டாகும் பழிக்கு நாணிஅதனைச் செய்யாமல் விடுத்தான். நாணுதலாவது
தனக்குப் பொருந்தாத இழிந்த செயலில் மனம் ஒடுங்குதல். முதல் வரம்
கொடும்புண் செய்ய, இரண்டாவது வரம் அப்புண்ணில் வேலை எடுத்து
நழைத்தாற்போன்ற மிகுந்த துன்பம் விளைத்தது.
அஞ்சலள், ஐயனது அல்லல் கண்டும்; உள்ளம்
நஞ்சிலள்; ‘நாண் இலள்’ என்ன, நாணம் ஆமால்;
‘வஞ்சனை பண்டு மடந்தை வேடம்’ என்றே
தஞ்சு என மாதரை உள்ளலார்கள், தக்கோர்.
பெண்மை குணங்கள் யாதுமின்றி இருந்த
கைகேயி நிலைபற்றிக்நஞ்சிலள்; ‘நாண் இலள்’ என்ன, நாணம் ஆமால்;
‘வஞ்சனை பண்டு மடந்தை வேடம்’ என்றே
தஞ்சு என மாதரை உள்ளலார்கள், தக்கோர்.
கூறுவது நாணம் தருகிறது என்கிறார் கம்பர். ஐயன் - கணவன், தலைவன்,
நஞ்சிலள் - நைந்திலள் என்பதன்போலி.
தசரதன் உனக்கு யார் இப்படி மனதை மாற்றியது என்று அவளுக்கு இராமன் பால் அன்பு மாறிப் போனதை உணர்ந்து முதலில் உன் மக இராமன் ஆணையாக தருவேன் என்றவன் இபோது என் மேல் ஆணை சொல் என்றான். கலங்காத உள்ளத்தினாலான கைகேயி
‘திசைத்ததும் இல்லை; எனக்கு வந்து தீயோர்
இசைத்ததும் இல்லை; முன் ஈந்த இவ் வரங்கள்,
குசைப் பரியோய்! தரின், இன்று கொள்வென்; அன்றேல்,
வசைத் திறன் நின்வயின் நிற்க , மாள்வென்’ என்றாள்.
தயரதன் சொற்களால் அவனுக்குத் தான் கேட்ட வரங்களைத் தர
விருப்பமில்லை என்று உணர்ந்தகைகேயி, ‘வரம்கொடுத்தால் வாழ்வேன்;
இன்றேல் சாவேன்’ என்கிறாள். குசைப்பரியோய் - யான் குதிரையைச் செலுத்தித் தேர் ஊர்ந்ததனால் அல்லவா நினக்குப்புகழ் உளதாயிற்று என்று குறிப்பித்தாள்..
‘ஆ கொடியாய்! எனும்; ஆவி காலும்; ‘அந்தோ!
ஓ கொடிதே அறம்!’ என்னும்; ‘உண்மை ஒன்றும்
சாக!’ எனா எழும்; மெய் தளாடி வீழும் -
மாகமும் நாகமும் மண்ணும் வென்ற வாளான்.
இந்த கொடுமை நான்கு ஐந்து திருமனம் செய்து கொண்ட எல்லா கிழவர்களுக்கும் இன்றும்
நடக்கின்றது. இங்கு காசினோ கிங் எனப்படும் ஸ்டான்லி
ஹோ அவர்களுக்கு நான்கு மனைவியர். அவருடைய கடைசி மனைவிக்கு அவருடை மூத்த மகளை விட வயது மிகவும் கம்மி. உடல்நிலை
சரியில்லாமல் இருக்கும் போது தன் பெயரில் இருந்த பங்குகளை கடைசி மனைவிக்கு மாற்ற, மற்ற மனைவிகள் மற்றும் குழந்தைகள் கோர்ட் படியேற, ஒரு வழியாக கெஞ்சி கூத்தாடி
பங்குகளை தன் பேருக்கு மாற்றியதையும் பார்க்கின்றோம்.ஓ கொடிதே அறம்!’ என்னும்; ‘உண்மை ஒன்றும்
சாக!’ எனா எழும்; மெய் தளாடி வீழும் -
மாகமும் நாகமும் மண்ணும் வென்ற வாளான்.
கனிமொழிக்கு விருப்பம் இருக்கின்றதோ இல்லையோ அவளை எப்படியாவது
அரசியலுக்கு இழுத்து வந்துவிட வேண்டும் என்ற வெறி மு. கவின் துணிவு இராசாத்தி அம்மாளுக்கு
இருப்பதையும் நாம் இன்று கண்கூடாகப் பார்க்கின்றோம். கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்ட
தொ(த)ண்டர்கள் அனைவரையும் ஓரம் கட்டி தூக்கி எறிந்துவுட்டு, இராஜ்ஜிய சபா எம் பி ஆக்கி
மந்திரி பதவி அதுவும் காபினெட் மந்திரி பதவி வேண்டும் என்று முக பாவம் பட்ட கஷ்டங்களும்
அவமானாங்களும் ஏராளாம். மு.க மூன்று வருடங்களுக்கு முன் டெல்லியில் சென்று முகாமிட்டு
தன் மகன், மகள், பேரன் என்ற மூவருக்கும் கேபினட் மினிஸ்டர் போஸ்ட் வேண்டும் என்றும் அது மட்டுமில்லாமல், இந்த இலாக்காதான் வேண்டும்
என்று வற்புறுத்த, தமிழகத்தை பாதிக்கும் எந்த விஷயத்திற்கும் டெல்லி செல்லாத இவர சென்று ஐந்து நாள் முகாமிட்டார். “இவர் என்
தந்தையை போன்றவர்” என்று கூறிய சோனியா காந்தி
இவரின் தயவு இந்த தடவை தேவையில்லை என்ற காரணாத்தால் காங்கிரஸ்
இவரை அலை கழித்ததும், தள்ளாத வயதில் வீல் சேருடன்
இவர் அலைந்ததும், மஹா கேவலம். ஒரு மதிப்பு
மிக்கத் தலைவராக முன்பு வலம் வந்தவர், மதிப்பை இழந்து அவமானப்பட, ஆங்கில மற்றும் வட இந்திய ஊடகங்கள் வாயிலாக கிழித்து
எறியப்பட்டது அதைவிடக் கொடுமை.
போல், மேல் உற்றது உண்டு எனின் நன்று ஆம் பொறை’ என்னா,
கால்மேல் வீழ்ந்தான் - கந்து கொல் யானைக் கழல் மன்னர்
மேல் மேல் வந்து முந்தி வணங்கி மிடை தாளான்.
கொள்ளான் நின் சேய் இவ் அரசு; அன்னான் கொண்டாலும்,
நள்ளாது இந்த நானிலம்; ஞாலம்தனில் என்றும்
உள்ளார் எல்லாம்ஒத உவக்கும் புகழ் கொள்ளாய்;
எள்ளா நிற்கும் வன் வழி கொண்டு என் பயன்?’ என்றான்.
தயரதன் பரதன் பண்புகள் அறிந்தவனா என்றால் கிடையாது. ஆனாலும் எப்படியாவது இராமன் காட்டிற்குப் போவதை தடுக்க வேண்டும் என்ற காரணத்தினால் பரதன் அரசு பதவியை ஏற்க மாட்டான் என்கின்றான். அப்படியே அவன் கொண்டாலும் நானிலம் உள்ளவர்கள் பெருமையாகவோ புகழாகவோ அதை கருத மாட்டார்கள். யான்
வற்புறுத்த இராமன் அரசினை ஏற்க இசைந்தான்; அவன் ஆசை கொண்டு
முயலவில்லை.பரதன் நாட்டைப் பெறுவதற்காக இராமனைக் காட்டிற்குத் துரத்த வேண்டுவதில்லை. நீ
விரும்பினால் தானாகவே பரதனுக்கு
நாட்டை அளித்துவிடுவான். அப்பொழுது முறைகேடு யாதும் நேராது என்றான் தயரதன். நள்ளாது இந்த நானிலம்; ஞாலம்தனில் என்றும்
உள்ளார் எல்லாம்ஒத உவக்கும் புகழ் கொள்ளாய்;
எள்ளா நிற்கும் வன் வழி கொண்டு என் பயன்?’ என்றான்.
வாய் தந்தேன் என்றே; இனி, யானோ
அது மாற்றேன்;
நோய் தந்து என்னை நோவன செய்து நுவலாதே;
தாய் தந்தென்ன, தன்னை இரந்தால், தழல் வெங் கண்
பேய் தந்தீயும்; நீ இது தந்தால் பிழை ஆமோ?’
இரந்து கேட்டால் பேயும் தாய்போல இசையும் என்றால் பரதனுக்குத்நோய் தந்து என்னை நோவன செய்து நுவலாதே;
தாய் தந்தென்ன, தன்னை இரந்தால், தழல் வெங் கண்
பேய் தந்தீயும்; நீ இது தந்தால் பிழை ஆமோ?’
தாயாகிய நீ இசைதல் தவறாகுமோ? என்றான்.
இன்னே இன்னே பன்னி இரந்தான்
இகல் வேந்தன்;
தன் நேர் இல்லாத் தீயவள் உள்ளம் தடுமாறாள்,
‘முன்னே தந்தாய் இவ் வரம்; நல்காய்; முன்வாயேல்,
என்னே? மன்னா! யார் உளர் வாய்மைக்கு இனி?’ என்றாள்
தன் கணவன் எவ்வளவு இரந்து வேண்டியும் இரங்காமையின் ‘தன் நேர் இல்லாத் தீயவள்’ என்றார்.‘தீயவை
யாவையினும் சிறந்த தீயாள்’
(1504) என்று முன்னர்க்
குறித்தமை கருதத்தக்கது. நல்காய்என்பதனை முற்றெச்சமாக்கிச் செயற்படுத்தாமல் என்றும் பொருள் கொள்ளலாம். ‘மன்னா? யார்உளர்
வாய்மைக்கு இனி’ என்பது
இகழ்ச்சிக் குறிப்புதன் நேர் இல்லாத் தீயவள் உள்ளம் தடுமாறாள்,
‘முன்னே தந்தாய் இவ் வரம்; நல்காய்; முன்வாயேல்,
என்னே? மன்னா! யார் உளர் வாய்மைக்கு இனி?’ என்றாள்
‘நின்
மகன் ஆள்வான்; நீ, இனிது
ஆள்வாய்; நிலம் எல்லாம்.
உன் வயம் ஆமே; ஆளுதி; தந்தேன்; உரை குன்றேன்;
என் மகன், என் கண், என் உயிர், எல்லா உயிர்கட்கும்உன் வயம் ஆமே; ஆளுதி; தந்தேன்; உரை குன்றேன்;
நன்மகன் இந்த நாடு இறவாமை நய’ என்றான். இப்பாட்டின் பிற்பாதி தயரதன் இராமன்மீது கொண்டிருந்த அன்பின் மிகுதியையும், இராமன்சிறப்பையும் தெரிவிக்கிறது. ‘உன் உயிர்க்கு என நல்லன் மன்னுயிர்க்கு எலாம்’ (1350) எனவசிட்டன் உரைத்தது ஒப்பு
நோக்கத்தக்கது. தயரதன் இராமன் காடு சென்றால் தன் உயிர் நீங்கிவிடும் என்பதனைத்
தெரிவித்துத் தன்னைக்காத்திடுமாறு கைகேயியை வேண்டினான்
‘ “ஒன்றாநின்ற ஆர் உயிரோடும், உயர்
கேள்வர்
பொன்றா முன்னம் பொன்றினர்” என்னும் புகழ் அல்லால்,
இன்று ஓர்காறும், எல் வளையார், தம் இறையோரைச்
பொன்றா முன்னம் பொன்றினர்” என்னும் புகழ் அல்லால்,
இன்று ஓர்காறும், எல் வளையார், தம் இறையோரைச்
கொன்றார் இல்லை;
கொல்லுதியோ நீ? - கொடியோளே! இதுவரை கணவனைக் கொன்ற மகளிர் இல்லை. நீ
கணவனாகிய என்னைக் கொல்லுகின்றாய் ஆதலின்உன்போலக் கொடியவர் உண்டோ என்று தயரதன் கைகேயியை இகழ்ந்தான். பத்தினிப் பெண்டிர் கணவன் இறந்தபின்
உயிர்வாழா இயல்பினர் என்று நூல்கள் கூறும்.
ஆழிப் பொன் - தேர் மன்னவன் இவ்வாறு அயர்வு எய்தி,
பூழிப் பொன் - தோள் முற்றும் அடங்கப் புரள் போழ்தில்,
“ஊழின் பெற்றாய்” என்று உரை; இன்றே ல், உயிர் மாய்வென்;
பாழிப் பொன் - தார் மன்னவ!’ என்றாள், பசை அற்றாள்.
பூழிப் பொன் - தோள் முற்றும் அடங்கப் புரள் போழ்தில்,
“ஊழின் பெற்றாய்” என்று உரை; இன்றே ல், உயிர் மாய்வென்;
பாழிப் பொன் - தார் மன்னவ!’ என்றாள், பசை அற்றாள்.
ஈவுஇரக்கமில்லாத கைகேயி ”மன்னவா காத்தலும் அறத்தை போற்றுதலும் உன் கடமை ஆகும். அதனைச் செய்க. இல்லையென்றால் நான்
உயிர் மாய்வேன்” என்றாள் கருத்தைக் காட்டுகிறது.
வீய்ந்தாளே இவ் வெய்யவள்’ என்னா, மிடல்
வேந்தன்
‘ஈந்தேன்! ஈந்தேன்! இவ் வரம்; என் சேய் வனம் ஆள,
மாய்ந்தே நான் போய் வான் உலகு ஆள்வென்; வசை வெள்ளம்
நீந்தாய், நீற்தாய், நின் மகனோடும் நெடிது!’ என்றான். தயரதன், வரம் தராவிட்டால் கைகேயி உயிரை விடுதல் உறுதி என்று அஞ்சி, ‘ஈந்தேன், ஈந்தேன்’ என்று விரைந்து கூறினான். இவ் அடுக்கு -தேற்றத் தையும் வெகுளியையும் காட்டுவது. வீய்ந்தாள்- துணிவு பற்றி இறந்த காலத்தில் கூறினார்.
‘ஈந்தேன்! ஈந்தேன்! இவ் வரம்; என் சேய் வனம் ஆள,
மாய்ந்தே நான் போய் வான் உலகு ஆள்வென்; வசை வெள்ளம்
நீந்தாய், நீற்தாய், நின் மகனோடும் நெடிது!’ என்றான். தயரதன், வரம் தராவிட்டால் கைகேயி உயிரை விடுதல் உறுதி என்று அஞ்சி, ‘ஈந்தேன், ஈந்தேன்’ என்று விரைந்து கூறினான். இவ் அடுக்கு -தேற்றத் தையும் வெகுளியையும் காட்டுவது. வீய்ந்தாள்- துணிவு பற்றி இறந்த காலத்தில் கூறினார்.
ஏறு ஆம் என்னும் வன் துயர் ஆகத்திடை மூழ்க,
தேறான் ஆகிச் செய்கை மறந்தான்; செயல் முற்றி,
ஊறா நின்ற சிந்தையினாளும் துயிலுற்றாள்.
தொடரும்
No comments:
Post a Comment